என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொரோனாவுக்கு பலி
மத்தியபிரதேசத்தில் 2 தடுப்பூசி போட்டவர் கொரோனாவுக்கு பலி
By
மாலை மலர்17 Nov 2021 2:06 AM GMT (Updated: 17 Nov 2021 2:06 AM GMT)

மத்தியபிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் 4½ மாத காலத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தூர் :
கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, அந்த வைரஸ் தொற்று தாக்கினாலும் பெரும்பாலும் பாதிப்பு கடுமையாக இருக்காது, மரணம் நேரிடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 69 வயதான ஒருவர், 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.
இவர் இந்தூர் மனோரமா ராஜே டி.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் மரணம் அடைந்தார். இதை மாவட்ட தொடர்பு அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர் உறுதி செய்தார். உயிரிழந்தவர், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
4½ மாத காலத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.
கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, அந்த வைரஸ் தொற்று தாக்கினாலும் பெரும்பாலும் பாதிப்பு கடுமையாக இருக்காது, மரணம் நேரிடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 69 வயதான ஒருவர், 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.
இவர் இந்தூர் மனோரமா ராஜே டி.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் மரணம் அடைந்தார். இதை மாவட்ட தொடர்பு அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர் உறுதி செய்தார். உயிரிழந்தவர், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
4½ மாத காலத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
