search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    பீகார் - கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

    பீகாரில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. இதில் அடிக்கடி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.  

    இதற்கிடையே, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 9  பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் கள்ளச் சாராயம்  அருந்தியதால் சுமார்  26 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். 

    கோபால்கஞ்சில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் நேற்று இறந்தனர். 

    இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என கோபால்கஞ்ச் எஸ்.பி அனந்த்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×