search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி வருகை
    X
    பிரதமர் மோடி வருகை

    ரோம், கிளாஸ்கோ பயணம் நிறைவு- நாடு திரும்பினார் பிரதமர் மோடி

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
    புதுடெல்லி:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து வாடிகன் சிட்டி சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். 

    பின்னர் அங்கிருந்து பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார். 

    இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்து சேர்ந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×