என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு டோஸ் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி
Byமாலை மலர்10 Oct 2021 5:01 PM GMT
ரஷ்ய நிறுவனத்தின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனம் ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை இரண்டு முறை செலுத்த வேண்டும். அதன்பின் ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தினால் போதுமானது.
இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இந்தியாவில் உள்ள ஆறு முன்னணி நிறுவனங்களிடம் தயாரிக்க ரஷ்யா ஒப்பந்தம் செய்தது. அதன்படி இந்திய நிறுவனங்கள் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் மையமாக இந்தியா உருவாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முதல் தடுப்பூசி ஸ்புட்னிக் லைட் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X