என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓம் பிரகாஷ் சவுதாலா
    X
    ஓம் பிரகாஷ் சவுதாலா

    10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா

    அரியானா மாநில முன்னாள் முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா 10-ம் வகுப்பின் ஆங்கில பாடத்தேர்வை இன்று எழுதியுள்ளார்.
    அரியானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு தற்போது 86 வயதாகிறது. ஆங்கில பாடத்தேர்வுக்கு நன்றாக தயாராகியதாகவும், நல்ல மதிப்பெண் பெறுவேன் என்றும் சவுதாலா தெரிவித்துள்ளார்.

    நான் திஹார் ஜெயிலில் இருக்கும்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதினேன். எனினும், ஆங்கில பாடத்திற்கான தேர்வை மட்டும் எழுதவில்லை. கல்வி வாரியம் எனக்கு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை வழங்கியது. ஆகவே, நான் தற்போது தேர்வு எழுதியுள்ளேன்.

    இளம் வயதில் ஆங்கிலம் குறித்து மிகப்பெரிய அளவில் கற்றுக் கொள்ளவில்லை. பின்னர் ஆங்கிலத்தை புரிந்து கொண்டேன். தற்போது எழுதியுள்ளேன் என்றார் சவுதாலா.

    ஜூனியர் அளவிலான ஆசிரியர்கள் பணியமர்த்தல் வழக்கில் சவுதாலா 10 வருடம் சிறைத்தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட சவுதாலா கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
    Next Story
    ×