என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தொழுகை
ரம்ஜான் பண்டிகை: மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது
By
மாலை மலர்13 May 2021 1:57 AM GMT (Updated: 13 May 2021 1:57 AM GMT)

பொது மக்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான் தொழுகை மற்றும் இப்தாரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பொது மக்கள் ரம்ஜான் தொழுகை நடத்த மசூதிகள் அல்லது பொது இடங்களில் கூட்டம் சேர கூடாது எனவும் மும்பை அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை :
ரம்ஜான் பண்டிகையையொட்டி கூட்டமாக மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது என மும்பை அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது மக்கள் ரம்ஜானை எளிமையாக கொண்டாட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் ரம்ஜான் கொண்டாட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொது மக்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான் தொழுகை மற்றும் இப்தாரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பொது மக்கள் ரம்ஜான் தொழுகை நடத்த மசூதிகள் அல்லது பொது இடங்களில் கூட்டம் சேர கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது மக்கள் மும்பை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்கி உள்ள நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியே வரவேண்டும், மற்ற நேரங்களில் வெளியே வர கூடாது எனவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடக் கூடாது, இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது எனவும் அரசு தெரிவித்து உள்ளது. இதேபோல நடைபாதை வியாபாரிகள் சாலையோரம் கடைகள் போட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் உரிய காரணம் இன்றி வெளியே சுற்றக்கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி கூட்டமாக மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது என மும்பை அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது மக்கள் ரம்ஜானை எளிமையாக கொண்டாட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. மேலும் ரம்ஜான் கொண்டாட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி பொது மக்கள் தங்கள் வீடுகளில் ரம்ஜான் தொழுகை மற்றும் இப்தாரை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல பொது மக்கள் ரம்ஜான் தொழுகை நடத்த மசூதிகள் அல்லது பொது இடங்களில் கூட்டம் சேர கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது மக்கள் மும்பை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்கி உள்ள நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியே வரவேண்டும், மற்ற நேரங்களில் வெளியே வர கூடாது எனவும் மாநில அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடக் கூடாது, இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது எனவும் அரசு தெரிவித்து உள்ளது. இதேபோல நடைபாதை வியாபாரிகள் சாலையோரம் கடைகள் போட கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் உரிய காரணம் இன்றி வெளியே சுற்றக்கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
