என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் வக்கீல் சாப் திரைப்படம் திடீர் நிறுத்தம் - திரையரங்கை சூறையாடிய பவன் கல்யாண் ரசிகர்கள்
Byமாலை மலர்9 April 2021 11:11 PM GMT (Updated: 9 April 2021 11:11 PM GMT)
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் குமார் நடித்திருந்தார்.
ஐதராபாத்:
ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வக்கீல் சாப். இந்தப் படத்தினை தில் ராஜு, போனி கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக் இதுவாகும். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் குமார் நடித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வக்கீல் சாப் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனிடையே தெலுங்கானாவின் ஜகுலம்பா கத்வால் பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் தொழில்நுட்ப காரணமாக வக்கீல் சாப் திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையரங்கின் கதவு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக வக்கீல் சாப் திரைப்படத்தின் டிரைலர் திரையரங்கில் வெளியானபோதும் பவன் கல்யாண் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X