search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பிரதமர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முன்னெப்போதும் இல்லாத கடுமையாக சூழ்நிலைகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதுடன், உலகில் தன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டில் தன்னம்பிக்கை பற்றிய பார்வை உள்ளது, சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. 

    விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இதற்காக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் எளிதாக கடன் பெற முடியும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் ஏபிஎம்சி சந்தைகளை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரிச்சுமையை சாமானிய மக்கள் மீது சுமத்துவோம் என்று பலரும் நினைத்தார்கள். இருப்பினும், நாங்கள் ஒரு வெளிப்படையான பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம். மொத்தத்தில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    நிதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்பு முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். 
    Next Story
    ×