என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதிஷ் குமார் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு குழிபறிப்பார் -பீகார் அரசியலில் பரபரப்பை எகிறச்செய்த சிரக் பஸ்வான் கருத்து
Byமாலை மலர்28 Oct 2020 4:14 AM GMT (Updated: 28 Oct 2020 4:14 AM GMT)
பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்ததும் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியைவிட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் செல்ல திட்டமிட்டிருப்பதாக சிரக் பஸ்வான் கூறி உள்ளார்.
பாட்னா:
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வெளியிட்டுள்ள டுவிட்டரில் வெளியிட்ட அதிரடியான பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிரக் பஸ்வான் கூறுகையில், ‘நிதீஷ் குமாருக்கு மக்கள் வழங்குட்ம ஒவ்வொரு வாக்கும் பீகாரை பலவீனப்படுத்தி அழிப்பது மட்டுமல்லாமல், ஆர்ஜேடி மற்றும் மெகா கூட்டணியை பலப்படுத்தும். அவர் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் செல்ல ஆயத்தங்களைச் செய்துள்ளார். இதற்கு முன்பு கூட, ஆர்.ஜே.டி.யின் ஆசீர்வாதத்துடன் ஆட்சியமைத்துள்ளார்’ என்றார்.
‘பீகார் மாநிலம் முதல் 15 ஆண்டுகள் வளர்ச்சியே இல்லாமல் பிரபலமற்று இருந்தது. இரண்டாவது 15 ஆண்டுகளில் பீகார் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் இப்போது உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடனும், நாங்கள் பீகார் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் நிதிஷ் குமார் இல்லாத அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். நிதிஷ்குமார் கட்சியை விட லோக் ஜனசக்தி கட்சி அதிக இடங்களில் போட்டியிடுகிறது. நிதீஷ் குமாரை விட நாங்கள் அதிக இடங்களை வென்ற பிறகு, பாஜக-லோக் ஜனசக்தி கூட்டணி அரசு அமையும்’ என்றும் சிரக் பஸ்வான் கூறி உள்ளார்.
பீகார் மக்கள் தவறாமல் வெளியே வந்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும் என்றும் சிரக் பஸ்வான் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X