search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் அனைத்துக்கட்சி கூட்டம்
    X
    காஷ்மீர் அனைத்துக்கட்சி கூட்டம்

    காஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு

    வீட்டுக்காவலில் இருந்த மெகபூபா முப்தி விடுதலையான நிலையில் பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
     
    இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் முதல்மந்திரிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்து வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் முல்மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான மெகபூபா முப்தி தொடர்ந்து வீட்டுக்காவலிலேயே இருந்து வந்தார்.

    இதற்கிடையில், 14 மாதங்கள் வீட்டுக்காவலுக்கு பின்னர் மெகபூபா முப்தி கடந்த 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மெகபூபா முப்தியை நேற்று தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிடோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட்து.

    இந்நிலையில், காஷ்மீர் அரசியல் விவகாரம் குறித்து தேசிய மாநாட்டுக்கட்சியின் பரூக் அப்துல்லா வீட்டில் இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி (சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு முந்தைய நாள்) நடைபெற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட குப்கார் பிரகடனம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குப்கார் பிரகடனம் என்பது காஷ்மீரின் சுய ஆட்சி, சிறப்பு அந்தஸ்து, தனித்தன்மையை ஒருங்கிணைந்து பாதுகாக்க அனைத்து கட்சியும் துணைநிற்கும் என உறுதிபூண்டுள்ளனர். மேலும், அதற்கான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் காஷ்மீரில் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×