என் மலர்
செய்திகள்

அமித் ஷா
தாய்மொழியுடன் சேர்த்து இந்தியையும் வளர்க்க வேண்டும் - அமித் ஷா
தாய் மொழியுடன் சேர்த்து அனைவரும் இந்தி மொழியையும் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அனைவரும் தாய்மொழியுடன் இந்தி மொழியின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story