search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திக்கவாணிபாலம் கடற்கரை
    X
    திக்கவாணிபாலம் கடற்கரை

    விசாகப்பட்டினம்: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

    விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள திக்கவாணிபாலம் கடற்கரையில் நேற்று ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    இந்நிலையில், கடலில் குளித்துக்கொண்டிருந்த 2 சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். கரையில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முடிந்தும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×