என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு 9-வது இடம்
Byமாலை மலர்30 May 2020 6:34 AM GMT (Updated: 30 May 2020 6:34 AM GMT)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டிய நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 7964 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 173763 ஆனது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகின் மிக மோசமான நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவில் இதுவரை 4971 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் எண்ணிக்கையில் சீனாவை (4,634) இந்தியா பின்னுக்கு தள்ளி உள்ளது.
உலகம் முழுவதும் 60.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 26.61 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா - 1,793,530
பிரேசில்- 468,338
ரஷியா- 387,623
ஸ்பெயின்- 285,644
பிரிட்டன்- 271,222
இத்தாலி- 232,248
பிரான்ஸ்- 186,835
ஜெர்மனி-183,019
இந்தியா-173,763
துருக்கி- 162,120.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 7964 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 173763 ஆனது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகின் மிக மோசமான நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தியாவில் இதுவரை 4971 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் எண்ணிக்கையில் சீனாவை (4,634) இந்தியா பின்னுக்கு தள்ளி உள்ளது.
உலகம் முழுவதும் 60.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.66 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 26.61 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா - 1,793,530
பிரேசில்- 468,338
ரஷியா- 387,623
ஸ்பெயின்- 285,644
பிரிட்டன்- 271,222
இத்தாலி- 232,248
பிரான்ஸ்- 186,835
ஜெர்மனி-183,019
இந்தியா-173,763
துருக்கி- 162,120.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X