search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
    X
    பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்தது- 26997 பேர் டிஸ்சார்ஜ்

    மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இதுவரை 26997 பேர் குணமடைந்துள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் இதுவரை 1.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 ஆக உயர்ந்துள்ளது.

    நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 59546 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 62,228 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2098 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26997 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 33133 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
    Next Story
    ×