என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி தரக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
Byமாலை மலர்10 April 2020 2:24 PM GMT (Updated: 10 April 2020 2:24 PM GMT)
கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது விழாக்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின்போது எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புனியா சலிலா ஸ்ரீவத்சவா கூறியதாவது:
ஏப்ரல் மாதத்தில் பண்டிகைகள் வரும் நிலையில் எந்த திருவிழாக்களுக்கும் அனுமதி கூடாது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X