என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மம்தா பானர்ஜி காலை தொட்ட வணங்கி போலீஸ் அதிகாரி
மம்தா காலை தொட்டு வணங்கிய போலீஸ் ஐ.ஜி. - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
By
மாலை மலர்29 Aug 2019 6:13 AM GMT (Updated: 29 Aug 2019 6:13 AM GMT)

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தா பான்ர்ஜியின் காலை தொட்டு வணங்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா:
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் டிகா பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக வினித்குமார் கோயல் இருந்து வருகிறார். இவர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
சுற்றுப்பயணம் செய்த அன்று அவருடைய பிறந்த நாள் ஆகும். எனவே மம்தா பானர்ஜி முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மம்தா பானர்ஜி அங்கிருந்த தலைவர்களுக்கு கேக் ஊட்டி விட்டார்.
அந்த நேரத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா அருகில் இருந்தார். அவருக்கும் மம்தா பானர்ஜி கேக் ஊட்டினார். உடனே ராஜீவ்மிஸ்ரா, மம்தா பானர்ஜியின் காலை தொட்டு வணங்கினார்.
அவர் அந்த நேரத்தில் போலீஸ் சீருடையில் இருந்தார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தாவின் காலை தொட்டு வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் காலை தொட்டு வணங்கும் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் டிகா பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக வினித்குமார் கோயல் இருந்து வருகிறார். இவர் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.
சுற்றுப்பயணம் செய்த அன்று அவருடைய பிறந்த நாள் ஆகும். எனவே மம்தா பானர்ஜி முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது மம்தா பானர்ஜி அங்கிருந்த தலைவர்களுக்கு கேக் ஊட்டி விட்டார்.
அந்த நேரத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா அருகில் இருந்தார். அவருக்கும் மம்தா பானர்ஜி கேக் ஊட்டினார். உடனே ராஜீவ்மிஸ்ரா, மம்தா பானர்ஜியின் காலை தொட்டு வணங்கினார்.
அவர் அந்த நேரத்தில் போலீஸ் சீருடையில் இருந்தார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மம்தாவின் காலை தொட்டு வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் காலை தொட்டு வணங்கும் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளனர்.
இதுசம்பந்தமாக மம்தாவோ அல்லது அந்த போலீஸ் அதிகாரியோ இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.
மம்தா காலை தொட்டு வணங்கிய போலீஸ் ஐ.ஜி. - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ#mamatabanerjeepic.twitter.com/ZimjrXIbnB
— Maalai Malar News (@maalaimalar) August 29, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
