என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் சென்னை பெண் கத்தியால் குத்திக்கொலை
Byமாலை மலர்26 Aug 2019 4:33 AM GMT (Updated: 26 Aug 2019 4:33 AM GMT)
திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் சென்னை பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:
சென்னை ஆரியபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சிந்தியா (வயது 45). கணவன் மனைவி இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை திருப்பதி வந்தனர்.
பஸ்நிலையம் பெத்தகாப்பு லேஅவுட்டில் உள்ள விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கூறி ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்து தங்கினர்.
நேற்று மாலை வரை அறை கதவு திறக்கபடவில்லை. மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து தூர் நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் திருப்பதி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். விடுதிக்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிந்தியா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டிருந்தது.
சிந்தியாவுடன் தங்கியிருந்த அவரது கணவர் முருகன் தலைமறைவாகி விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான்பாஷா சிந்தியாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிந்தியா எதற்காக கொலை செய்யப்பட்டார். கணவன் மனைவிக்குள் என்ன தகராறு நடந்தது என விசாரணை நடத்தி முருகனை தேடி வருகின்றனர்.
சென்னை ஆரியபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சிந்தியா (வயது 45). கணவன் மனைவி இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை திருப்பதி வந்தனர்.
பஸ்நிலையம் பெத்தகாப்பு லேஅவுட்டில் உள்ள விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாக கூறி ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்து தங்கினர்.
நேற்று மாலை வரை அறை கதவு திறக்கபடவில்லை. மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து தூர் நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் திருப்பதி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். விடுதிக்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிந்தியா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டிருந்தது.
சிந்தியாவுடன் தங்கியிருந்த அவரது கணவர் முருகன் தலைமறைவாகி விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான்பாஷா சிந்தியாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிந்தியா எதற்காக கொலை செய்யப்பட்டார். கணவன் மனைவிக்குள் என்ன தகராறு நடந்தது என விசாரணை நடத்தி முருகனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X