search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒன்றரை கோடி ரூபாய், ஏ.கே.47 துப்பாக்கியுடன் காஷ்மீரில் இருவர் கைது
    X

    ஒன்றரை கோடி ரூபாய், ஏ.கே.47 துப்பாக்கியுடன் காஷ்மீரில் இருவர் கைது

    காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் சிலரது நடமாட்டம் சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



    இதைதொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்த போலீசார் கூல் அருகேயுள்ள ஹரா பகுதியில் இன்று இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஏ.கே.47 ரக துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×