என் மலர்
செய்திகள்

குவாலியர் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. #GwaliorRailwayStation
குவாலியர்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். கேண்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #GwaliorRailwayStation
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். கேண்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #GwaliorRailwayStation
Next Story






