search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உபியில் நாளை பிரமாண்ட ரோட்ஷோ நடத்தி பிரசாரம் செய்யும் பிரியங்கா
    X

    உபியில் நாளை பிரமாண்ட ரோட்ஷோ நடத்தி பிரசாரம் செய்யும் பிரியங்கா

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா நாளை முதல் உத்தரபிரதேசத்தில் ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று 3வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு 5  கட்டங்களாக  ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றார்.



    அந்த வகையில்  நாளை ககா மற்றும் காசிப்பூர் பகுதிகளில் நடைபெறவுள்ள பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றவுள்ளார்.

    இதனையடுத்து ஏப்ரல் 25 தேதி  ஜான்சி தொகுதியில் காலை 11 மணி அளவில் ரோட்ஷோ  நடத்திய பின்னர்  ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

    மேலும் ஏப்ரல் 26ம் தேதி  மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் வாகன அணிவகுப்பு நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi

    Next Story
    ×