என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பெண் ஊழியர் பாலியல் புகார்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு
By
மாலை மலர்20 April 2019 6:40 AM GMT (Updated: 20 April 2019 6:40 AM GMT)

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #CJIRanjanGogoi
புதுடெல்லி:

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன்.
பொய் புகார் பரப்பும் பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால் இதுபான்ற புகாரை அவர் அளித்துள்ளார். என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். #CJIRanjanGogoi
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன்.
பொய் புகார் பரப்பும் பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால் இதுபான்ற புகாரை அவர் அளித்துள்ளார். என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். #CJIRanjanGogoi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
