search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் ஆதாயத்துக்கு ராணுவத்தை பயன்படுத்துவதா? - முன்னாள் முப்படை தளபதிகள் ஆட்சேபனை
    X

    அரசியல் ஆதாயத்துக்கு ராணுவத்தை பயன்படுத்துவதா? - முன்னாள் முப்படை தளபதிகள் ஆட்சேபனை

    அரசியல் ஆதாயத்துக்கு ராணுவத்தை பயன்படுத்த கூடாது என ஆட்சேபம் தெரிவித்து முன்னாள் முப்படை தளபதிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். #LokSabhaElections2019 #MilitaryVeterans
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, தீபக் கபூர், முன்னாள் விமானப்படை தளபதி என்.சி.சூரி, முன்னாள் கடற்படை தளபதிகள் எல்.ராமதாஸ், அருண் பிரகாஷ், மேத்தா, விஷ்ணு பகவத் மற்றும் ஓய்வு பெற்ற 148 முப்படை உயர் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

    அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஆயுதப்படைகள், எல்லைதாண்டி சென்று நடத்தும் தாக்குதல்களுக்கு அரசியல் தலைவர்கள் உரிமை கோரும் ஏற்க இயலாத, வழக்கத்துக்கு மாறான நடைமுறை நிலவி வருகிறது. ஆயுதப்படைகளை ‘மோடி சேனை’ என்று அழைக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.

    அவர்களின் அரசியல் செயல் திட்டங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மேலும், விமானி அபிநந்தன் புகைப்படத்தை பிரசாரத்துக்கு உபயோகிக்கிறார்கள். இதற்கு எங்கள் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MilitaryVeterans
    Next Story
    ×