search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை
    X

    அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். #ElectionCommissionMeeting #SunilArora
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  #ElectionCommissionMeeting #SunilArora
    Next Story
    ×