என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை - ஆனால் மேலாண்மை போதாது - மத்திய மந்திரி நிதின்கட்காரி
Byமாலை மலர்26 Feb 2019 1:33 AM GMT (Updated: 26 Feb 2019 1:33 AM GMT)
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமான அளவு இல்லை என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார். #NitinGadkari #Water #India
புதுடெல்லி:
இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.
விழாவில் மத்திய நீராதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மராட்டிய மாநிலம் முதல் பரிசையும், குஜராத் 2-வது பரிசையும், ஆந்திரா 3-வது பரிசையும் பெற்றன.
இதைப்போல மாவட்டங்கள் வரிசையில் நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றன.
இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இதைப்போல நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3-வது பரிசை பெற்றது.
இந்த பரிசுகளை மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜே.ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர், முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியதாவது:-
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரியவந்துள்ளது.
பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டம் மூலம் பல திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இப்போது தண்ணீரை சேமிப்பதற்காக பாசனத்துக்கு தண்ணீரை கால்வாய்கள் மூலம் அனுப்புவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க மற்ற கால்வாய்களும் குழாய்களாக மாற்றப்படும்.
கும்பமேளா விழாவையொட்டி கங்கையில் தொடர்ச்சியாகவும், தூய்மையானதாகவும் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் தண்ணீர் சுத்தமாக இருந்ததாக பாராட்டி உள்ளனர். கங்கையில் டால்பின்கள், ஆமைகள், நீர்ப்பறவைகள் காணப்படுவதால் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது தெரிகிறது.
நீர் சேகரிப்பு பிரச்சினையில் மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்தப்படுவது அவசியம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர்நிலைகளை புதுப்பிப்பது ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இவ்வாறு நிதின்கட்காரி பேசினார்.
இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.
விழாவில் மத்திய நீராதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மராட்டிய மாநிலம் முதல் பரிசையும், குஜராத் 2-வது பரிசையும், ஆந்திரா 3-வது பரிசையும் பெற்றன.
இதைப்போல மாவட்டங்கள் வரிசையில் நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றன.
இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இதைப்போல நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3-வது பரிசை பெற்றது.
இந்த பரிசுகளை மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜே.ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர், முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியதாவது:-
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரியவந்துள்ளது.
பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டம் மூலம் பல திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இப்போது தண்ணீரை சேமிப்பதற்காக பாசனத்துக்கு தண்ணீரை கால்வாய்கள் மூலம் அனுப்புவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க மற்ற கால்வாய்களும் குழாய்களாக மாற்றப்படும்.
கும்பமேளா விழாவையொட்டி கங்கையில் தொடர்ச்சியாகவும், தூய்மையானதாகவும் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் தண்ணீர் சுத்தமாக இருந்ததாக பாராட்டி உள்ளனர். கங்கையில் டால்பின்கள், ஆமைகள், நீர்ப்பறவைகள் காணப்படுவதால் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது தெரிகிறது.
நீர் சேகரிப்பு பிரச்சினையில் மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்தப்படுவது அவசியம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர்நிலைகளை புதுப்பிப்பது ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இவ்வாறு நிதின்கட்காரி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X