search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி
    X

    முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

    முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்கள் (சீட்டு கம்பெனி), ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்து நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் 2025-ம் ஆண்டுக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், ரூ.28 லட்சம் கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொழில்களை உருவாக்குவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×