search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா வெற்றி பெற என்னை பயன்படுத்திக்கொண்டது - அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
    X

    பா.ஜனதா வெற்றி பெற என்னை பயன்படுத்திக்கொண்டது - அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

    2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக்கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். #AnnaHazare #BJP
    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் அன்னா ஹசாரே கடந்த 30-ந்தேதி போராட்டத்தை தொடங்கினார்.

    அவர் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.

    இந்த நிலையில் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா என்னை பயன்படுத்திக் கொண்டது. லோக்பாலுக்கான எனது போராட்டம் மூலம்தான் பா.ஜனதாவும், ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. இப்போது இவர்கள் இருவர் மீதும் எனக்கு சிறிதளவு கூட மரியாதை இல்லை.

    பிரதமர் மோடியின் அரசு மக்களை தவறாக வழி நடத்துகிறது. மராட்டிய மாநில அரசும் கடந்த 4 ஆண்டுகளாகவே பொய்களை கூறி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொய்களை கூற முடியும். இந்த அரசு நாட்டு மக்களை கைவிட்டுவிட்டது.

    2011 மற்றும் 2014-ல் என்னுடைய போராட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் இன்று எனது கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார். #AnnaHazare #BJP
    Next Story
    ×