search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்- அன்னா ஹசாரேவுடன் மகாராஷ்டிரா முதல்வர் சந்திப்பு
    X

    7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்- அன்னா ஹசாரேவுடன் மகாராஷ்டிரா முதல்வர் சந்திப்பு

    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனத்தை வலியுறுத்தி 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். #AnnaHazare
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

    நேற்றைய நிலவரப்படி அன்னா ஹசாரே மிகவும் சோர்வாக காணப்பட்டார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.



    உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார்.

    அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast
    Next Story
    ×