search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ-மம்தா மோதல் விவகாரம்: உள்துறைக்கு ரகசிய அறிக்கை அனுப்பினார் கவர்னர்
    X

    சிபிஐ-மம்தா மோதல் விவகாரம்: உள்துறைக்கு ரகசிய அறிக்கை அனுப்பினார் கவர்னர்

    மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி உள்ளார். #CBI #WestBengalGovernor
    கொல்கத்தா:

    சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் மெட்ரோ சேனல் அருகே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினார். அதேசமயம், திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளை சிறைப்பிடித்தது மற்றும் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.

    இதையடுத்து,  தலைமைச் செயலாளர் மற்றும் மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார். நிலைமையை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், உள்துறைக்கு கவர்னர் திரிபாதி ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளார். #CBI #WestBengalGovernor
    Next Story
    ×