என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டக திட்டம் துவக்கம்
Byமாலை மலர்30 Jan 2019 2:50 AM GMT (Updated: 30 Jan 2019 2:50 AM GMT)
மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். #PankajaMunde
மும்பை :
மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்தை நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 4 லட்சம் பெண்களுக்கு இது முதல் பிரசவமாகும். இந்த 4 லட்சம் பேருக்கும் குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும்.
இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.
ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #PankajaMunde
மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்தை நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு இந்த குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மேலும் நிதி தேவைப்படும் பட்சத்தில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. இதில் 4 லட்சம் பெண்களுக்கு இது முதல் பிரசவமாகும். இந்த 4 லட்சம் பேருக்கும் குழந்தைகள் நல பரிசு பெட்டகம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பரிசு பெட்டகத்தில் குழந்தைகளின் உடைகள், பிளாஸ்டிக் டைபர், மெத்தை, துண்டு, தெர்மோமீட்டர், மசாஜ் எண்ணெய், கொசு வலை, போர்வை, பிளாஸ்டிக் தரைவிரிப்பு, சாம்பு, பொம்மை, நகவெட்டி மற்றும் சாக்ஸ் ஆகியவை அடங்கியிருக்கும்.
இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.
ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #PankajaMunde
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X