search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் பலியான 3 சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஐதராபாத் வந்தன
    X

    அமெரிக்காவில் பலியான 3 சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஐதராபாத் வந்தன

    அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 3 சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஐதராபாத் வந்தன. அதன்பின்னர் அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. #USFireAccident #Telangana
    ஐதராபாத்:

    அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் அகாடமியில் படித்து வந்த சாத்வீகா ஷெரோன் (வயது 17), ஜாய் சுசித்ரா (14), ஆரோன் சுஹாஸ் (15) ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஆவர். அவர்கள், அங்கு டென்னிசி மாகாணத்தில் காலியர் வில்லே நகரத்தில் உள்ள டேனி என்பவருடைய வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்றிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



    அவர்களது உடல்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தன. அவற்றை குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர். அங்கிருந்து நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு உடல்கள் எடுத்துச்செல்லப்பட்டன. நேற்று இறுதிச்சடங்கு நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவர்களது உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
    Next Story
    ×