search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்
    X

    வரும் கல்வியாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #GeneralCategoryQuota
    புதுடெல்லி:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கும் பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்  மசோதா பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம், வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2019 கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. #PrakashJavadekar #GeneralCategoryQuota
    Next Story
    ×