search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி
    X

    இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை மந்திரி தெரிவித்தார். #Parliament
    புதுடெல்லி:

    மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதலை நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாக ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த முடியவில்லை என்றால் துறைமுகம், கப்பல்கள், ஆயில் டேங்குகளை தாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதையும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliament
    Next Story
    ×