என் மலர்
செய்திகள்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #RBIGovernor #UrjitPatelresigns
புதுடெல்லி:
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவி காலத்தில் ரிசர்வ் வங்கி அடைந்த பல்வேறு ஏற்றங்களுக்கு காரணமாக இருந்து ஒத்துழைப்பு தந்த அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், கடுமையாக உழைத்த இதர பணியாளர்களையும் தனது ராஜினாமா கடிதத்தில் நினைவுகூர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளார். #RBIGovernor #UrjitPatelresigns
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தனது பதவி காலத்தில் ரிசர்வ் வங்கி அடைந்த பல்வேறு ஏற்றங்களுக்கு காரணமாக இருந்து ஒத்துழைப்பு தந்த அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், கடுமையாக உழைத்த இதர பணியாளர்களையும் தனது ராஜினாமா கடிதத்தில் நினைவுகூர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளார். #RBIGovernor #UrjitPatelresigns
Next Story






