search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பேரணியில் பங்கேற்க வந்த விவசாயி  3-வது மாடியில் இருந்து விழுந்து பலி
    X

    டெல்லி பேரணியில் பங்கேற்க வந்த விவசாயி 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி

    டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து வந்த விவசாயி இன்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.

    நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளவர்கள் டெல்லியில் உள்ள பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.


    அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு குழுவினர் பர்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவன் கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று தவறி கீழே விழுந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் கிரண் சன்ட்டப்பா(52) என்றும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    Next Story
    ×