search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை - பிரதமர் மோடி
    X

    நேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை - பிரதமர் மோடி

    டெல்லியில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கனவுகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். #PMModi #AzadHindSarkar #Netaji
    புதுடெல்லி:

    இந்திய தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.



    அதைத்தொடர்ந்து பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளதாகவும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும், நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். நாட்டில் பிரித்தாளும் கொள்கையை ஒழிக்க அவர் விரும்பியதாகவும், ஆனால் அவரது கனவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #AzadHindSarkar #Netaji
    Next Story
    ×