search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவின் இரு மாவட்டங்களுக்கு விடப்பட்ட கனமழை ரெட் அலர்ட் வாபஸ்
    X

    கேரளாவின் இரு மாவட்டங்களுக்கு விடப்பட்ட கனமழை ரெட் அலர்ட் வாபஸ்

    கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த கனமழை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று வாபஸ் பெறப்பட்டது. #RedAlert #RedAlertWithdrawn
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



    குறிப்பாக,  கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அம்மாநில வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. மழை, வெள்ளம் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துகொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு விடுத்திருந்த கனமழை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை இன்று வாபஸ் பெறப்படுவதாக கேரள மாநில வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn 
    Next Story
    ×