என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
Byமாலை மலர்2 Oct 2018 10:19 PM GMT (Updated: 2 Oct 2018 10:19 PM GMT)
லோக் ஆயுக்தா தொடர்பாக தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். #AnnaHazare #HungerStrike
ரலேகான் சித்தி:
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அவர் அறிவித்தார்.
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
இதையடுத்து நேற்று தொடங்க இருந்த தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்துவேன்’ என்றார். #AnnaHazare #HungerStrike
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அவர் அறிவித்தார்.
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
இதையடுத்து நேற்று தொடங்க இருந்த தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்துவேன்’ என்றார். #AnnaHazare #HungerStrike
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X