search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் 13,500 கிராமங்களில் பள்ளி கூடங்களே இல்லை
    X

    இந்தியாவில் 13,500 கிராமங்களில் பள்ளி கூடங்களே இல்லை

    மத்திய அமைச்சகம் நாடு முழுவதும் கல்வித்தரம் பற்றி நடத்திய ஆய்வில் 13,511 கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் இல்லையென்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #School
    புதுடெல்லி:

    மத்திய அரசு கல்வியை ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் கல்வித்தரம் பற்றி
    ஆய்வு நடத்தியது. இதில் நாடு முழுவதும் 13,511 கிராமங்களில் பள்ளிக் கூடமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் செயல்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில் 41 கிராமங்களில் மட்டுமே பள்ளிக்கூடம் இல்லை.

    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் 3,474 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை என்ற நிலைமை உள்ளது. தொடர்ந்து பீகாரில் 1,493 கிராமங்களிலும், மேற்கு வங்காளத்தில் 1,277 கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் உள்ளது.

    இதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே கல்வியின் அவசியத்தை பரப்ப வேண்டும். விவசாயம் அல்லது பணம் சம்பாதிக்கும் வேலை என எதுவாக இருந்தாலும் கல்வி அவசியம் என்பதை எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

    வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை வரலாற்றுப் பூர்வமாக கல்வி கற்றலில் சிறந்து விளங்கி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களில் பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் படிப்பதை ஊக்கப்படுத்துகிறார்கள். அதன் பயனைத்தான் பார்க்கிறோம் என்று தெரிவித்தனர். #School
    Next Story
    ×