search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா முதல்-மந்திரிக்கு ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் கடிதம்
    X

    ஒடிசா முதல்-மந்திரிக்கு ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் கடிதம்

    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு ரூ.50 கோடி தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் கைதி ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். #NaveenPatnaik
    பிலாஸ்பூர்:

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக்குக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத் தில் ரூ.50 கோடி தர வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தது என்பதை ஒடிசா மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து அந்த மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் பிலாஸ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த புஸ்பேந்திரநாத் சவுகான் (வயது40) என்ற கைதி மிரட்டல் கடிதம் எழுதி இருந்தது தெரியவந்தது.

    கொள்ளை மற்றும் கொலை குற்றங்களுக்காக அவர் 2009-ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பிரபலம் அடைவதற்காக இதுபோன்று மிரட்டல் கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். ஒடிசா மாநில கலெக்டர் ஒருவருக்கும் இதேபோல் கடிதம் அனுப்பியதாக கூறினார். #NaveenPatnaik
    Next Story
    ×