search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதக்க மங்கை டுடீ சந்துக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை - ஒடிசா முதல்மந்திரி அறிவிப்பு
    X

    பதக்க மங்கை டுடீ சந்துக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை - ஒடிசா முதல்மந்திரி அறிவிப்பு

    ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு தற்போது கூடுதலாக 1.5 கோடி ரூபாய் அளிக்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.



    இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் தற்போது பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், டுடீ சந்த் 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பெற உள்ளார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    Next Story
    ×