search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பா.ஜனதா தேசிய செயற்குழு அடுத்த மாதம் 8-ந் தேதி கூடுகிறது
    X

    டெல்லியில் பா.ஜனதா தேசிய செயற்குழு அடுத்த மாதம் 8-ந் தேதி கூடுகிறது

    டெல்லியில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. #BJP #ExecutiveMeet
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 18, 19-ந் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 16-ந் தேதி மரணம் அடைந்ததால் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8, 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

    இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர் என அக்கட்சியின் தேசிய செயலாளர் தருண் சக் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கு முன்பு பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #ExecutiveMeet 
    Next Story
    ×