என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்
    X

    ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்

    பரங்கிமலை ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க. எம்பி வலியுறுத்தினார். #ChennaiTrainAccident #ADMK
    புதுடெல்லி:

    சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த சிலர், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்து உள்ளது.



    மக்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன், பரங்கிமலை விபத்து குறித்து பேசினார். அப்போது, ரெயில் விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    பரங்கிமலையில் நடந்த விபத்து ரெயில் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்ததால் உயிரிழக்க நேரிட்டதாக குற்றம்சாட்டப்பட்டாலும், தண்டவாளத்தை ஒட்டி உள்ள தடுப்புச் சுவர்தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த சுவரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். #ChennaiTrainAccident #ADMK
    Next Story
    ×