search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு
    X

    மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட நடன கலைஞர் சோனல் மன்சிங், பேராசிரியர் ராகேஷ் சின்ஹா உள்பட 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். #parliamentarymonsoonsession #Rajyasabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய நடன கலைஞர் சோனல் மன்சிங், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, ஒடிசாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் ரகுநாத் மொஹபத்ரா ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.



    மேலும், கேரளாவை சேர்ந்த சிஐடியு மாநில பொது செயலாளர் எலமரம் கரீம், சிபிஐ பினாய் விஸ்வம், கேரள காங்கிரஸ் தலைவர் மாணி உள்பட மொத்தம் 7 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #parliamentarymonsoonsession #Rajyasabha
    Next Story
    ×