search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆவணங்கள் மூலம் ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை - 3 அகதிகள் கைது
    X

    போலி ஆவணங்கள் மூலம் ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை - 3 அகதிகள் கைது

    ஐதராபாத் பகுதியில் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை பெற்ற ரோஹிங்கியா அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #RohingyaRefugees
    ஐதராபாத்:

    மியான்மர் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது அங்கிருந்து வெளிவந்த ரோஹிங்கியா இன மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இந்தியாவில் ஐதராபாத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பான் அட்டை போன்ற அடையாள அட்டைகளை பெற்ற ஒரு பெண் உட்பட 3 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் போலி ஆவணங்களை பெற்று அடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கைதான ரோஹிங்கியாக்கள், அகதிகளுக்கான ஐ.நா தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #RohingyaRefugees
    Next Story
    ×