search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லுக்கான ஆதரவு விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயருகிறது - மத்திய மந்திரிசபை இன்று முடிவு
    X

    நெல்லுக்கான ஆதரவு விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயருகிறது - மத்திய மந்திரிசபை இன்று முடிவு

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியாகவும் இதை பா.ஜனதா அளித்தது.

    அதன்படி, மத்திய மந்திரிசபை கூட்டத்தில், கரீப் (சம்பா) பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில், கரீப் பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை டன்னுக்கு ரூ.17 ஆயிரத்து 500 ஆக உயரும்.

    கேழ்வரகுக்கான ஆதரவு விலைதான் அதிகபட்சமாக டன்னுக்கு ரூ.9 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. அதன் விலை டன்னுக்கு ரூ.27 ஆயிரமாக அதிகரிக்கும்.

    இதுபோல், பாசி பயறு உள்பட மொத்தம் 14 தானியங்களின் ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    Next Story
    ×