என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் தூதரகம் திறக்கப்படும் - தெலங்கானா அரசு
Byமாலை மலர்29 Jun 2018 9:37 AM GMT (Updated: 29 Jun 2018 9:37 AM GMT)
தெலங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UAEConsulate #Hyderabad
ஐதராபாத்:
யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் கடந்த 24ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவர் மும்பை, அகமதாபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை யுனைடெட் அரபு எமிரேட்சின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லா பின் சையத் அல் நயன் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யு.ஏ.இ. நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஷேக் அப்துல்லாவுடன் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் நாட்டின் தூதரகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. #UAEConsulate #Hyderabad
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X