search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மாநிலத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
    X

    கேரள மாநிலத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    கேரள மாநிலத்தையும் மாநிலத்தின் கோரிக்கைகளையும் பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். #PinarayiVijayan #PMModi
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்திற்கான ரேஷன் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கக் கோரி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேரள அரசு சார்பில் பிரதமர் அலுவலகத்தில் கேட்கப்பட்டிருந்தது.

    ஆனால், பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே திட்டமிட்ட பணிகள் இருப்பதால், அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. அதற்குப் பதிலாக மத்திய உணவுத்துறை மந்திரி  ராம் விலாஸ் பாஸ்வானைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த பினராயி விஜயன், பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். கேரள மாநிலத்தையும் கேரளாவின் கோரிக்கைகளையும் மோடி தொடர்ந்து புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



    ‘நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை. கேரளாவின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணிப்பது, மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் சரிவு ஏற்பட வழிவகுத்துள்ளது. பிரதமரை பார்த்து எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கச் சென்றால், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

    கூட்டாட்சி அமைப்பில் திருப்தியடைந்த மாநிலமும் வலுவான மத்திய அரசும் நமக்கு தேவை. மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பதில் இப்போது இருப்பது போல் முந்தைய அரசுகள் மோசமாக இருந்தது இல்லை.’ என்று பினராயி விஜயன் குறிப்பிட்டார். #PinarayiVijayan #PMModi

    Next Story
    ×