search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
    X

    கால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ.645 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழக கால்நடைத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.441 கோடியே 31 லட்சம், கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ரூ.41 கோடியே 73 லட்சம், தேசிய கால்நடை இயக்க திட்டங்களில் மத்திய அரசின் பங்காக ரூ.162 கோடியே 42 லட்சம் என மொத்தம் ரூ.645 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்’ என்றார். 
    Next Story
    ×