என் மலர்
செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் மரணம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். #JammuKashmir #PakistanViolates #ArmyJawanMartyred
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும் இந்த தாக்குதலில் மணிப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் பிகாஸ் குருங் (21), என்பவர் வீர மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் தாக்குதலை தொடர்ந்து நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
#JammuKashmir #PakistanViolates #ArmyJawanMartyred
Next Story






