search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி. பேச்சால் அதிர்ச்சி
    X

    காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி. பேச்சால் அதிர்ச்சி

    ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் என முன்னாள் ராணுவ வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான வாட்ஸ் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #StonePelters #BJPMPVats
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்தது. சமீபத்தில்  உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் இதனை உறுதி செய்தார். குழந்தைகள் தவறுகள் செய்கிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வழக்குகளை வாபஸ் பெற உள்ளதாக ராஜ்நாத் கூறியிருந்தார்.

    அரசாங்கத்தின் இந்த முடிவினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரியும் பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான வாட்ஸ் கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ‘கல்வீச்சாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பான செய்தியை படித்தேன். ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என வாட்ஸ் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. #StonePelters #BJPMPVats
    Next Story
    ×